-மாற்றுத்திறன் மாணவர்களுக்கான -சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் விடுத்துள்ள கோரிக்கை .
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22
📝 கோரிக்கை எண் 1. பள்ளி கல்வி துறையில் 1998 முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை , அடிப்படை பணிச்சலுகைகள் , மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல்
பள்ளி கல்வி துறையில் 1998 முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு
💥பணி ஆணை வழங்கி பள்ளி அல்லது பி.ஆர்.சி எதேனும் ஒரு இடத்தில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்.
💥வங்கி கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்.
💥தொடர்ந்து தற்செயல் விடுப்பு அனுமதி , மதவிடுப்பு , மகப்பேறு விடுப்பு
💥RCI - CRE பயிற்சி SPO மூலமாக வழங்க ஆவண செய்ய வேண்டும்.
💥தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
💥டிசம்பர் 3இல் உரிய அங்கீகாரம் வழங்கி கெளரவித்தது ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
💥விபத்து காப்பீடு , இறப்பு இழப்பீடு வழங்குதல் வேண்டும்
💥EPF பிடித்தம் செய்ய வேண்டும்.
💥விழாக்கால முன்பணம் வழங்க வேண்டும்.
💥சிறப்பு பயிற்றுநர் / மாற்றுத்திறனாளி மாணவர் விகிதாச்சாரம் 1:30 என நிர்ணயம் செய்ய வேண்டும்.
💥போக்குவரத்து படி ₹.3000 MHRD பட்ஜெட்டில் கேட்டு வழங்குதல் வேண்டும்.
💥மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்கள்- சிறப்பு ஊர்திப்படி ₹.2000 என நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
💥EMIS அடையாள அட்டை வழங்க வேண்டும்.
💥விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
💥மத்திய அரசு பங்களிப்பு 18000 + மாநில அரசு பங்களிப்பு 12000 = ₹.30000 என ஊதியம் நிர்ணயத்து வழங்குதல் வேண்டும்.
உள்ளிட்ட அடிப்படை பணிச்சலுகைகள் வழங்கி அதற்கான பணி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் Staff Register கல்வித்துறை மூலமாக பராமரிக்க வேண்டும்.
📝 கோரிக்கை எண் 2. RTE சட்டத்தின் படி சிறப்பு பயிற்றுநர்கள் அரசுப்பள்ளிகளில் 1 - 8 வகுப்புகளில் பணி நியமனம்
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு RTE கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி தமிழக அரசு நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. எனவே நிதி நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு DPEP , SSA , SS திட்டங்களில் 23 ஆண்டு பணி அனுபவம் பெற்று பணியாற்றி வரும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து கருணை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் பணிநிரந்தரம் செய்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும்.
📝 கோரிக்கை எண் 3. Day Care Centre / SRP மைய பராமரிப்பாளர் மற்றும் உதவியாளர் இருவருக்கும் பணிச்சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு
Day Care Centre / SRP மையத்தில் இல் கடும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களை பராமரித்து வரும் பராமரிப்பாளர் / உதவியாளர் இருவருக்கும் பணிச்சலுகைகள் அளித்து முறையே 10000 / 5000 என ஊதியம் வழங்க வேண்டும்.
கோரிக்கை குறித்து தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டுமாய்
SS-IE_Tamilnadu♿ மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.







Comments
Post a Comment