-மாற்றுத்திறன் மாணவர்களுக்கான -சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் விடுத்துள்ள கோரிக்கை .

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன்  மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22













📝 கோரிக்கை எண் 1. பள்ளி கல்வி துறையில் 1998  முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணி ஆணை , அடிப்படை பணிச்சலுகைகள் , மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல்

பள்ளி கல்வி துறையில் 1998  முதல் 2021 என தொடர்ந்து 23 ஆண்டுகள் சேவை பணியில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு 


💥பணி ஆணை வழங்கி பள்ளி அல்லது பி.ஆர்.சி எதேனும் ஒரு இடத்தில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்.


💥வங்கி கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும்.


💥தொடர்ந்து தற்செயல் விடுப்பு அனுமதி , மதவிடுப்பு , மகப்பேறு விடுப்பு


💥RCI - CRE பயிற்சி SPO மூலமாக வழங்க ஆவண செய்ய வேண்டும்.


💥தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.


💥டிசம்பர் 3இல் உரிய அங்கீகாரம் வழங்கி கெளரவித்தது ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.


💥விபத்து காப்பீடு , இறப்பு இழப்பீடு வழங்குதல் வேண்டும்


💥EPF பிடித்தம் செய்ய வேண்டும்.


💥விழாக்கால முன்பணம் வழங்க வேண்டும்.


💥சிறப்பு பயிற்றுநர் / மாற்றுத்திறனாளி மாணவர் விகிதாச்சாரம் 1:30 என நிர்ணயம் செய்ய வேண்டும்.


💥போக்குவரத்து படி ₹.3000  MHRD பட்ஜெட்டில் கேட்டு வழங்குதல் வேண்டும்.


💥மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்கள்- சிறப்பு  ஊர்திப்படி ₹.2000 என நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.


💥EMIS அடையாள அட்டை வழங்க வேண்டும்.


💥விருப்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.


💥மத்திய அரசு பங்களிப்பு  18000 + மாநில அரசு பங்களிப்பு  12000 = ₹.30000  என ஊதியம் நிர்ணயத்து வழங்குதல் வேண்டும்.


உள்ளிட்ட அடிப்படை பணிச்சலுகைகள் வழங்கி அதற்கான பணி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும்  Staff Register கல்வித்துறை மூலமாக பராமரிக்க வேண்டும்.


📝 கோரிக்கை எண் 2. RTE சட்டத்தின் படி சிறப்பு பயிற்றுநர்கள் அரசுப்பள்ளிகளில் 1 - 8 வகுப்புகளில் பணி நியமனம் 


தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு RTE கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி தமிழக அரசு நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. எனவே நிதி நெருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு DPEP , SSA , SS திட்டங்களில் 23 ஆண்டு பணி அனுபவம் பெற்று  பணியாற்றி வரும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆகிய எங்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து கருணை அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் பணிநிரந்தரம் செய்து வாழ்வாதாரம் காத்திட வேண்டும்.


📝 கோரிக்கை எண் 3. Day Care Centre / SRP மைய பராமரிப்பாளர் மற்றும் உதவியாளர் இருவருக்கும் பணிச்சலுகைகள் மற்றும் ஊதிய உயர்வு


Day Care Centre / SRP மையத்தில் இல் கடும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களை பராமரித்து வரும் பராமரிப்பாளர் / உதவியாளர் இருவருக்கும்  பணிச்சலுகைகள் அளித்து  முறையே 10000 / 5000 என ஊதியம் வழங்க வேண்டும்.


கோரிக்கை குறித்து தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து நிறைவேற்றிட  வேண்டுமாய்

SS-IE_Tamilnadu♿ மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - அரசுப்பள்ளிகளில் 1-8 வகுப்பில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன்  மாணவர்களுக்கு கல்வி , சிறப்பு பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் 1761 சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் - தமிழக அரசு  கருணையோடு பரிசீலித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் 3 அம்ச கோரிக்கைகள் 2021-22